search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் கட்டிட தொழிலாளி பலி"

    திருவட்டார் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகன் அனில்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் திருவட்டாரில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து பெரும் சிலம்பு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கல்லுப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அனில்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வழக்கமாக அந்த சாலை அதிகமான போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×